
#காஷ்மீர் #CaptainNews | #TamilNews
காஷ்மீரில் எதிரிகளை முறியடிக்க படைகள் தயார் நிலையில் உள்ளதாக வடக்கு பிராந்திய ராணுவ தளபதி ரன்பீர் சிங் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் பதற்றம் நிலவிவரும் நிலையில், ஸ்ரீநகரில் உளவு மற்றும் பாதுகாப்பு அமைப்புகளின் உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெற்றது. வடக்கு பிராந்திய ராணுவ தளபதி ரன்பீர் சிங் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உயர் ராணுவ, காவல்துறை மற்றும் துணை ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் பேசிய அவர், காஷ்மீரில் அமைதியையும், பாதுகாப்பையும் நிலைநாட்ட தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கடந்த சில நாட்களாக, தீவிரவாதிளின் பலத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகளை பாகிஸ்தான் தீவிரப்படுத்தி இருக்கிறது. அதனை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தி வருவதாக தெரிவித்தார்.
காஷ்மீர் குறித்த பாகிஸ்தானின் பொய் பிரசாரத்தை மக்கள் நம்பவேண்டாம் என கேட்டுக்கொண்ட அவர், அதற்காக சமூக வலைதளங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் கூறினார்.
இதனிடையே, ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப் பிரிவை, மத்திய அரசு, நேற்று முன்தினம் ரத்து செய்தது. அதற்கு முன், ஜம்மு, ஸ்ரீநகர், லடாக் உள்ளிட்ட பகுதிகளில், பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். இதையடுத்து, மாநிலம் முழுவதும், அமைதியான சூழல் நிலவுவது குறிப்பிடத்தக்கது.
Like: https://www.facebook.com/Captainnewstv
Follow: https://twitter.com/captainnewstv
Web: http://www.captainnews.net
எதிரிகளை முறியடிக்க படைகள் தயார் நிலையில் உள்ளன - ராணுவ தளபதி ரன்பீர் சிங் video phone beyonce mp3 | |
6 Likes | 6 Dislikes |
60 views views | 133K followers |
News & Politics | Upload TimePublished on 6 Aug 2019 |
Không có nhận xét nào:
Đăng nhận xét