
#MBBS #BDS #CaptainNews | #TamilNews
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளை பாதியில் கைவிட்டால், 10 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புக்கான கவுன்சிலிங் முடிந்து விட்டது. இதில், மாநில ஒதுக்கீட்டில் உள்ள அனைத்து இடங்களும் நிரம்பி விட்டன. இந்நிலையில், கல்லுாரியில் சேர்ந்துள்ள மாணவர்கள், படிப்பை பாதியில் கைவிட்டால், ஒரு லட்சம் முதல், 10 லட்சம் ரூபாய் வரை, அபராதம் விதிக்கப்படும் என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, மருத்துவ கல்வி இயக்ககம் வெளியிட்ட அறிவிக்கையில், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு இடங்கள் பெற்ற மாணவர்கள், படிப்பை கைவிடுதென நாளைக்குள் தெரிவித்தால் ஒருலட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 6ம் தேதிக்கு மேல், படிப்பை கைவிட்டால், 10 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் அதேபோல், பி.டி.எஸ்., படிப்பில் இடங்கள் பெற்றவர்கள், 7ம் தேதிக்கு மேல் படிப்பை கைவிட்டால், 10 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் மருத்துவ கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது...
Like: https://www.facebook.com/Captainnewstv
Follow: https://twitter.com/captainnewstv
Web: http://www.captainnews.net
மருத்துவ படிப்புகளை பாதியில் கைவிட்டால் 10 லட்சம் ரூபாய் அபராதம்! video phone beyonce mp3 | |
1 Likes | 1 Dislikes |
30 views views | 133K followers |
News & Politics | Upload TimePublished on 3 Aug 2019 |
Không có nhận xét nào:
Đăng nhận xét