
#முதலமைச்சர்_குமாரசாமி #CaptainNews | #TamilNews
கர்நாடக மாநிலத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழலில், ஆளும் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை பேரவையில் நடைபெற உள்ளது.
கர்நாடாக மாநிலத்தில் முதலமைச்சர் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும் உச்சகட்ட சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜிநாமா கடிதம் மீது முடிவெடுக்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அதிருப்தி எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்குச் செல்ல கட்டாயப்படுத்த முடியாது என்றும் தெரிவித்தது.
இதனிடையே கடந்த 2 நாட்களாக நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவைக் கூட்டத்தில், பெரும்பான்மையை நீரூபிக்க முதலமைச்சர் குமாரசாமிக்கு ஆளுநர் வஜுபாய் வாலா உத்தரவிட்டும் வாக்கெடுப்பு நடைபெறவில்லை. அதிருப்தி எம்எல்ஏக்களை எப்படியாவது சமாதானப்படுத்தி விட காங்கிரஸ் பெரும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதற்காக எம்எல்ஏக்கள் கூட்டத்தையும் கூட்டியது.
இந்த சூழலில் கர்நாடக சட்டப்பேரவை நாளை கூடுகிறது. இதில் முதலமைச்சர் குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கூட்டணியில் உள்ள பகுஜன் சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏவான மகேஷ், நாளைய கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று கூறியுள்ளார். இதனால் முதலமைச்சர் குமாரசாமி தலைமையிலான அரசு ஏறக்குறைய கவிழ்வது உறுதி என்றே கூறப்படுகிறது.
Like: https://www.facebook.com/Captainnewstv
Follow: https://twitter.com/captainnewstv
Web: http://www.captainnews.net
கர்நாடக மாநிலத்தில் ஆளும் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு . காங்கிரஸ் கட்சித் | |
3 Likes | 3 Dislikes |
59 views views | 133K followers |
News & Politics | Upload TimePublished on 21 Jul 2019 |
Không có nhận xét nào:
Đăng nhận xét