
#Karnataka #Politics #CaptainNews | #TamilNews
கர்நாடக சட்டப்பேரவையில் ஆளும் கூட்டணி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வரும் 18-ம் தேதி எடுத்துக் கொள்ளப்படும் என்று சபாநாயகர் அறிவித்துள்ளார்.
அடுத்தடுத்து அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு என்ற பரபரப்பான சூழலில் கர்நாடக சட்டப்பேரவை இன்று பிற்பகல் 12,30 மணிக்கு கூடியது. அப்போது முதலமைச்சர் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கோரும் கடிதத்தை பாஜக எம்எல்ஏ சுரேஷ்குமார் அதிகாரப்பூர்வமாக சபாநாயகரிடம் வழங்கினார். அதனை பெற்றுக் கொண்ட சபாநாயகர் ரமேஷ்குமார், இது குறித்து அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார். அதன்படி அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் வரும் 18-ம் தேதி ஆளும் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாக சபாநாயகர் அறிவித்தார். இதையடுத்து கடந்த சில நாட்களாக கர்நாடக மாநிலத்தில் நிலவிய அரசியல் பதற்றம், வரும் வியாழக்கிழமை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Like: https://www.facebook.com/Captainnewstv
Follow: https://twitter.com/captainnewstv
Web: http://www.captainnews.net
கர்நாடக சட்டப்பேரவையில் வரும் 18-ம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானம் ! video phone beyonce mp3 | |
1 Likes | 1 Dislikes |
61 views views | 133K followers |
News & Politics | Upload TimePublished on 15 Jul 2019 |
Không có nhận xét nào:
Đăng nhận xét